சூலூர் அருகே சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுக்கூடத்தை பறக்கும் படை அதிகாரிகளால் சோதனையிட்டு மூடினர்.
சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் அனுமதியின்றி மதுக்கூடம் நடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து பறக்கும் படையினர் அங்கு சோதனை மேற்கொண்டனர். இதில் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் அதிகாரிகள் பறிமுதல் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து சூலூர் வட்டார உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபரின் மீது விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.