கோவை அருகே பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூரில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
சிறுமியின் வீட்டுக்கு புதன்கிழமை வந்த அவர், சிறுமியின் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களிடம் ரூ. 1 லட்சம் வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சிறுமி கொலையில் சம்பந்தப்பட்டவர் உடனடியாக கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால் கூட்டு பலாத்காரம் என்று காவல் துறையினரால் சொல்லப்பட்ட இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.