மாவட்டத்தில் ரூ. 2.84 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 04th April 2019 06:22 AM | Last Updated : 04th April 2019 06:22 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்து 84 ஆயிரத்து 450 பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி கோவை மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனர். அப்போது, மேட்டுப்பாளையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 950, தொண்டாமுத்தூரில் ரூ.68 ஆயிரத்து 500 என மொத்தம் ரூ. 2 லட்சத்து 84 ஆயிரத்து 450 பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணம் வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.