கோவையில் ஏப்ரல் 24-இல் தொழில்நுட்ப ஜவுளித் துறை தேசிய முதலீட்டாளர் கூட்டம்

கோவையில் தொழில்நுட்ப ஜவுளித் துறை தேசிய முதலீட்டாளர் கூட்டம்  வரும் 24-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.

கோவையில் தொழில்நுட்ப ஜவுளித் துறை தேசிய முதலீட்டாளர் கூட்டம்  வரும் 24-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.
இது தொடர்பாக இந்திய தொழில்நுட்ப ஜவுளி சங்கத்தின் தலைவர் கே.எஸ்.சுந்தரராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தொழில்நுட்ப ஜவுளித் துறையில் உள்ள சந்தை வாய்ப்புகள், சாத்தியக் கூறுகள், உரிய தொழில்நுட்பம், தொழில்நுட்பப் பொருள்கள் குறித்த ஆலோசனை வழங்குவதற்காகவும், சாதாரண ஜவுளித் தொழில் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் தொழில்முனைவோர், தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் ஈடுபடுவதற்கும், அது தொடர்பாக திட்டமிடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலும் வரும் 24-ஆம் தேதி முதலீட்டாளர் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
கோவை ரெசிடென்ஸி டவர்ஸ் ஹோட்டலில் நடைபெறும் இக் கூட்டத்தில், ஜவுளித் துறை அமைச்சக செயலர் ராகவேந்திர சிங் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறார். மேலும், வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்முனைவோர், ஆலோசகர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், இயந்திர உற்பத்தியாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு தொழில்நுட்ப ஜவுளி சங்கம் (022 - 25003098), தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தை (0422 - 4225333) தொடர்பு கொள்ளலாம் என அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com