மலைவாழ் மக்களில் வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக கோவை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர். நடராஜன் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
கோவை ராமநாதபுரம், மடத்தூர், நஞ்சுண்டாபுரம், தடாகம் பகுதிகளில் சனிக்கிழமை பி.ஆர். நடராஜன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:
மோடி நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகிவிட்டது. கோவை மக்களவை உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆனைகட்டி பகுதியில் உள்ள மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களில் வீடில்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித் தரவும், உடனடியாக வீட்டுமனைப் பட்டா பெற்றத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வீடுகளை மறு சீரமைப்பு செய்து தர முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
பிரசாரத்தின் போது, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், சரவணம்பட்டி பகுதிப் பொறுப்பாளர் பையாக்கவுண்டர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, பெரியநாயக்கன்பாளையம் காங்கிஸ் வட்டாரத் தலைவர் நடராஜ், மதிமுக ஒன்றியச் செயலாளர் முத்துச்சாமி உள்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.