வால்பாறையில் தீத்தொண்டு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில், சமையல் எரிவாயு சிலிண்டரை காற்றோட்டம் உள்ள அறையில் வைத்துப் பயன்படுத்த வேண்டும். மின்சார தீ விபத்து ஏற்படாமல் இருக்க தரமான மின் உபகரணங்களையும், வயர்களையும் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும் தீ விபத்தை தடுக்கும் முறைகள் பற்றியும் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.