முன்மாதிரி மாவட்டமாக கோவையை மாற்றுவேன்: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்

கோவையில் வேலைவாய்ப்பைப் பெருக்கி, தமிழகத்தின் முன்மாதிரி மாவட்டமாக கோவையை மாற்றுவேன் என்று

கோவையில் வேலைவாய்ப்பைப் பெருக்கி, தமிழகத்தின் முன்மாதிரி மாவட்டமாக கோவையை மாற்றுவேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஆர்.மகேந்திரன் கூறினார்.
கோவை மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்.மகேந்திரன் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமையன்று காலை 6 மணிக்கு சேரன் மாநகர் பகுதியில் தனது பிரசாரப் பயணத்தைத் துவக்கினார். அங்கிருந்து குமுதம் நகர், விநாயகபுரம், பாரதிபுரம், காந்தி மாநகர் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்தார்.
பின் ஜீவா நகர், ரத்தினபுரி, கண்ணப்பநகர், ராம்நகர், பாரதி காலனி, அன்னூர், சிவா நகர், ஜி.வி.ரெஸிடென்சி உள்ளிட்டப் பகுதிகளில் பிரசாரம் செய்து இறுதியாக லட்சுமிபுரம் பகுதியில் தனதுப் பிரசாரத்தை நிறைவு செய்தார். 
பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:
பெரும்பாலான கிராம மக்கள் கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.  மக்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானதாக இருக்கிறது. ஆனால், இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தவர்கள் இவற்றை செய்யவில்லை. ஆட்சியாளர்கள் தங்களது சுயநலத்தில் மட்டுமே அக்கறை செலுத்தியதன் விளைவு இது. நான் வெற்றி பெற்றால் நிச்சயம் மக்களுக்காக மட்டுமே பணியாற்றுவேன். கோவையில் வேலைவாய்ப்பைப் பெருக்கி, தமிழகத்தின் முன்மாதிரி மாவட்டமாக கோவை மாவட்டத்தை மாற்றுவேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com