மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உள்பட்ட 3 ஆவது வார்டு சீரங்கராயர் ஒடை பகுதியில் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ள கழிவுநீர் கால்வாயால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உள்பட்ட 3 ஆவது வார்டு சீரங்கராயர் ஓடை, ஷெரீப் நகர், தோல் சாப் , பாலாஜி நகர், கமலா நகர் உள்ளிட்ட பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்து வருகின்றனர். இப்பகுதிகளில் மேட்டுப்பாளையம், சிறுமுகை செல்லும் சாலையின் இடையே சீரங்கராயர் ஒடை பகுதி உள்ளது. இப்பகுதியில், உள்ள கழிவுநீர் கால்வாய் கடந்த 8 மாதத்துக்கு மேலாக தூர்வாராமல் உள்ளதால் கால்வாயில் மண் மற்றும் குப்பைகள் நிறைந்து தூர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.