கோவை குற்றாலத்தில், பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறப்பு சூழல் சந்திப்பு இயற்கை முகாம் ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை வனக் கோட்டம், கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா குழுவுடன் இணைந்து, ஓசை சுற்றுச்சூழல் அமைப்பினர் நடத்தும் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறப்பு சூழல் சந்திப்பு இயற்கை முகாம் ஏப்ரல் 28 ஆம் தேதி கோவை குற்றாலத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 7 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். தாவரங்களை அறிதல், பறவைகள், வண்ணத்துப் பூச்சிகளை நோக்குதல், மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து அறிந்து கொள்ளுதல், அறிஞர்களோடு சந்திப்பு என ஒருநாள் நிகழ்வாக இம்முகாம் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், எங்கள் அமைப்பின் நிர்வாகிகள் ரமேஷ் - 9994771119, யுகநாதன் 9486875759 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.