கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான காய்கறி, பழப் பொருள்கள் தயாரிப்பதற்கான பயிற்சி நடைபெற உள்ளது.
ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் உலர் காய்கறிகள், பழங்களில் இருந்து ஊறுகாய், உலர் பழ பார்கள், பழ ஜாம், பழரசம், ஊறுகனி, தயார் நிலை பானம் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள், பயிற்சி நாளன்று ரூ.1,500 செலுத்த வேண்டும்.
இது குறித்த மேலும் விவரங்களுக்கு 0422-6611340, 6611268 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழக அறுவடை பின்சார் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.