மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
சிறுமுகை, லிங்கபுரம், கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (52). கூலித் தொழிலாளி. இவர் பெத்திக்குட்டையிலிருந்து காந்தவயல் அருகே இருசக்கர வாகனத்தில் 25 மதுபான பாட்டில்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். இதில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து செல்வத்தை போலீஸார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.