இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல்: இரு இளைஞர்கள் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

கோவையில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
 கோவை, வெள்ளலூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் ஹரிஹரன் (23). பிளம்பராக வேலை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆசிக் (24). பெயிண்டராகப் பணியாற்றி வந்தார்.  இவர்களது நண்பர் ஹர்ஷத் (25). இவர்கள் மூவரும் சேர்ந்த ஹர்ஷத்தின் இருசக்கர வாகனத்தில் வெள்ளலூர் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த தனியார் பேருந்து மோதியதில் மூவரும் பலத்த காயமடைந்தனர்.
 அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹரிஹரன், ஆசிக் ஆகியோரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 ஹர்ஷத்துக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக போத்தனூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து 
வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com