காவல் உதவி ஆணையர் மகன் விபத்தில் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே தேரம்பாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது சாலையோரத்தில்

மேட்டுப்பாளையம் அருகே தேரம்பாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது சாலையோரத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் காவல் உதவி ஆணையர் மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
 கோவை மாவட்டம், விளாங்குறிச்சியைச் சேர்ந்தவர் சோமசேகர். இவர் கோவை நகர காவல் துறையில் குற்றப்பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரசன்ன விக்னேஷ் (27). கோவையில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
 இவரும் கோவை, வெள்ளப்பன் நகர் கிராமத்தைச் சேர்ந்த செளந்தரராஜன் மகள் விஷ்ணுபிரியாவும் (24), அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்தனர். தேரம்பாளையம் அருகே வந்தபோது சாலையோரத்தில் காய்ந்த நிலையில் இருந்த மரத்தின் கிளை திடீரென முறிந்து இவர்கள் மீது விழுந்தது. 
 இதில் பலத்த காயமடைந்த பிரசன்ன விக்னேஷ், விஷ்ணுபிரியா ஆகிய இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பிரசன்ன விக்னேஷ் வழியிலேயே உயிரிழந்தார். விஷ்ணுபிரியாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெரியநாயக்கன் பாளையம் டிஎஸ்பி மணி, காரமடை போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com