வால்பாறையில் காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு போலீஸார் சனிக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்த கரண்ராஜ் என்பவரை நிறுத்தி அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர். அப்போது அங்கு வந்த கரண்ராஜின் தந்தை தேவராஜ் (47), மதுபோதையில் அங்கு வந்து காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரனிடம் தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும். என் மகனுக்கு எப்படி அபராதம் விதிக்கலாம் எனக் கூறி தகராறு செய்ததாராம். இதுதொடர்பாக உதவி ஆய்வாளர் பிரபாகரன் அளித்த புகாரின்பேரில் வால்பாறை போலீஸார் வழக்குப்பதிந்து தேவராஜை கைது செய்தனர்.