கோயம்புத்தூர்
பழங்குடியின மக்களுக்கு வட்டியில்லா கடனுதவி
மேட்டுப்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட கீழ்செங்கலூர், கீழ்பில்லூர் பழங்குடியின கிராம மக்களுக்கு
மேட்டுப்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட கீழ்செங்கலூர், கீழ்பில்லூர் பழங்குடியின கிராம மக்களுக்கு வனத் துறை சார்பில் 18 பேருக்கு தொழில் தொடங்க ரூ. 5.40 லட்சம் வட்டியில்லா கடனுதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு, பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் வனச் சரகம் கீழ்செங்கலூர், கீழ்பில்லூர் பழங்குடியின கிராம உறுப்பினர்கள் 18 பேருக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5.40 லட்சம் வட்டியில்லா கடனுதவியை கோவை மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் வனச் சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் வனவர் ஸ்ரீராம், வனப் பணியாளர்கள் செய்திருந்தனர்.