பெண்ணிடம் இரண்டரைப் பவுன் நகை பறிப்பு

கோவையில் பெண்ணிடம் இரண்டரைப் பவுன் நகை பறித்துச் சென்ற 3 இளைஞர்கள் குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கோவையில் பெண்ணிடம் இரண்டரைப் பவுன் நகை பறித்துச் சென்ற 3 இளைஞர்கள் குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 கோவை, பீளமேடு, வி.கே.சாலையைச் சேர்ந்தவர் சுமதி (54). இவர் தனது வீட்டின் அருகே சனிக்கிழமை மாலை நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மூவர், சுமதி அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். 
இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸாரிடம் சுமதி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com