சூலூரில் சாலை விரிவாக்கப் பணிகளின்போது ஆக்கிரமிப்பையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சூலூர் வட்டாட்சியரிடம் பாஜகவினர் அண்மையில் மனு அளித்தனர்.
சூலூரில் காங்கேயம்பாளையத்திலிருந்து சிந்தாமணிப்புதூர் வரையிலான 7.5 கிலோ மீட்டர் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் சூலூர் நகரத்தில் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை குறுகலாகவே அமைக்கப்படுகிறது.
இங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சூலூர் பாஜக நகரத் தலைவர் ரவி தலைமையில் அக்கட்சியினர், வட்டாட்சியர் மீனாகுமாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மனு அனுப்பப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.