வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் பசுமாடு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
வால்பாறை, காமராஜர் நகரில் வசிப்பவர் செந்தில்பாலு. இவருக்குச் சொந்தமான பசுமாடுகள் அருகில் உள்ள தேயிலைத் தோட்டம் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மேய்ச்சலுக்கு சென்றுள்ளன. இதில் ஒரு பசுமாடு வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, அருகில் உள்ள சவரங்காடு எஸ்டேட் பகுதியில் திங்கள்கிழமை தேடிப் பார்த்தபோது சிறுத்தை தாக்கியதில் பசுமாடு இறந்து கிடந்தது தெரியவந்தது.