பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரியில் சுதந்திர தின கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரி வரலாற்றுத் துறை, ரீச் சமூகப் பணி அமைப்பு, அரிமா சங்கம் இணைந்து சுதந்திர தின குறித்த கருத்தரங்கை நடத்தினர்.
பொள்ளாச்சி அரிமா சங்கத் தலைவர் அப்பாஸ் வரவேற்றார். என்ஜிஎம் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் முத்துகுமரன் அறிமுக உரையாற்றினார். முதல்வர் பழனிசாமி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கோவை அரிமா சங்க முன்னாள் தலைவர் அழகேசன் பங்கேற்றார். அரிமா சங்க செயலாளர் முத்துகுமார் நன்றி கூறினார். என்ஜிஎம் கல்லூரி மேலாளர் ரகுநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.