பள்ளிச் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற கேரள மாநில இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், அப்பகுதியில் உள்ள கடைக்கு நோட்டு புத்தகம் வாங்க சென்றுள்ளார்.
அப்போது, கடையில் வேலை இருந்த கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த முனீர் (35) என்பவர் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதையடுத்து, அங்கிருந்து தப்பித்த சிறுமி, சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காரமடை போலீஸாரிடம் சிறுமியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, காரமடை போலீஸார் இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.