அன்னூர் அரசு மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சார்பில் தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அன்னூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சார்பில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மருத்துவமனை வளாகத்தில் இருந்த புதர்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டன.
மேலும் மருத்துவக் கழிவுகள் சேகரித்து வைக்கப்படும் கிடங்கில் சேதமடைந்த மேற்கூரையை அகற்றிவிட்டு புதிதாக மேற்கூரை அமைத்தனர். இந் நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிரஞ்சீவி, சந்தோஷ், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.