"கடின உழைப்பும், முயற்சியும் வெற்றியை அளிக்கும்'

கடின உழைப்பும், முயற்சியும் வெற்றியை அளிக்கும் என்று ஓய்வுபெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.கலியமூர்த்தி பேசினார். 

கடின உழைப்பும், முயற்சியும் வெற்றியை அளிக்கும் என்று ஓய்வுபெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.கலியமூர்த்தி பேசினார். 
 மேட்டுப்பாளையம் எஸ்.ஆர்.எஸ்.ஐ. மெட்ரிக். பள்ளியின் 39ஆவது ஆண்டு விழா காரமடை ஆர்.வி. கல்லூரி கலை அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தாளாளர் வி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். விழாவை சவிதா ராமகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தார். பள்ளி அறங்காவலர் வி.கோபாலகிருஷ்ணன், ஆர்.சுந்தர், பள்ளிச் செயலாளர் ஜெயகண்ணன், ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் லூசிதங்கராணி ஆண்டறிக்கை வாசித்தார்.
 இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஓய்வுபெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் ஏ.கலியமூர்த்தி பேசியதாவது: 
  மாணவர்கள் முதலில் தங்கள்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கடின உழைப்பும், முயற்சியும், வெற்றியை அளிக்கும். மாணவர்கள் இந்தப் பருவத்தில் நேரத்தை வீண் செய்ய வேண்டாம். ஒழுக்கமில்லாத குழந்தை விளைச்சல் இல்லாத நிலத்துக்கு சமம். பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மதிப்பெண்களைப் பெறுவதற்கு மட்டுமான கல்வியாக இல்லாமல் சுயமாக சிந்திக்கும் அளவுக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
  விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com