பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை, சாலை விரிவாக்கப் பணிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்லடம் சாலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நகரில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை பணிகளையும் அவர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணகுமார், கோட்டாட்சியர் ரவிக்குமார், நகராட்சி ஆணையர் கண்ணன், நகராட்சி பொறியாளர் முருகேசன், அதிமுக நிர்வாகிகள் ஜேம்ஸ்ராஜா, ரங்கநாதன், வீராசாமி, கிட்ஸ்பார்க் பள்ளித் தாளாளர் டி.எல்.சிங் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.