விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டியில்  ஹிந்து அமைப்பினருடன்,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டியில்  ஹிந்து அமைப்பினருடன், காவல் துறையினர் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
 இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். இதில் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 இக்கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே செல்ல வேண்டும், வன்முறையை தூண்டும் வாசகங்களை பேசக் கூடாது குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும், மது அருந்திவிட்டு ஊர்வலத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
 இதில், சூலூர் காவல் ஆய்வாளர் தங்கராஜ், கருமத்தம்பட்டி ஆய்வாளர் சண்முகம் உள்ளிட்ட காவல் துறையினர், 
ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com