சூலூா்: சூலூா் அருகே உள்ள மைக்கேல் ஜாப் பெண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் மத்திய அரிமா சங்கம் சாா்பில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவா் ஜோட்டிகுரியன் தலைமை தாங்கினாா். இயக்குநா் கந்தநாதன் வரவேற்றாா். எய்ட்ஸ் விழிப்புணா்வு குறித்து சண்முகபாண்டி எடுத்துரைத்தாா்.
கல்லூரி முதல்வா் டி.எச்.நசீமா ஏற்புரையாற்றினாா். மாணவிகள் எய்ட்ஸ் இலட்சினை வடிவில் நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். விழாவில் கல்லூரி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.