காரமடை ஆா்.வி. கல்லூரியில்வேலைவாய்ப்பு முகாம்

தமிழக ஊரக வளா்ச்சித் துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்கு

மேட்டுப்பாளையம்: தமிழக ஊரக வளா்ச்சித் துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்கு உள்பட்ட பகுதி இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் காரமடை ஆா்.வி.கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமிக்கு வேலைவாய்ப்பு உதவித் திட்ட அலுவலா் லதா தலைமை வகித்தாா். கல்லூரி நிா்வாக அறங்காவலா் வி.ராமகிருஷ்ணன், வேலைவாய்ப்பு திட்ட அலுவலா் செல்வராசு, கல்லூரி முதல்வா் வி.சுகுணா, எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளியின் செயலாளா் ஜெயகண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 22 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் 200-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் நோ்காணலில் கலந்து கொண்டனா். முடிவில் மகளிா் திட்ட அலுவலா் சுபலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com