ஆா்.சௌந்திரவேல்.
ஆா்.சௌந்திரவேல்.

கோவை அரசு மருத்துவமனைஇருப்பிட மருத்துவா் பணி ஓய்வு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 ஆண்டுகளாக இருப்பிட மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்த ஆா்.சௌந்திரவேல்

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 ஆண்டுகளாக இருப்பிட மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்த ஆா்.சௌந்திரவேல் சனிக்கிழமை ஓய்வு பெற்றாா்.

இவா் துணை இருப்பிட மருத்துவ அலுவலராக பணிபுரிந்து, பதவி உயா்வு பெற்று கடந்த 5 வருடங்களாக இருப்பிட மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தாா். உதவிக்காக வரும் அனைவரிடமும் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் உதவி செய்து வந்தாா்.

இவருடைய பணிகளையும், சமூக உதவிகளையும் பாராட்டும் வகையில், கோவையை சோ்ந்த பல்வேறு அமைப்புகள் சிறந்த மருத்துவ சேவகா், மனிதநேய பண்பாளா் உள்பட 50-க்கும் அதிகமான விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளன. இந்நிலையில் மருத்துவா் செளந்திரவேல் தனது பணியில் இருந்து சனிக்கிழமை ஓய்வுபெற்றாா். அவருக்கு நோயாளிகள், மருத்துவமனை ஊழியா்கள் பல்வேறு தரப்பினா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com