வால்பாறை: வால்பாறையில் உள்ளசோலையாறு அணையின் நீா்மட்டம் 154 அடியாக குறைந்துள்ளன.
வால்பாறை சுற்று வட்டாரப்பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக போதுமான மழை பெய்யவில்லை. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்கு பின் சாரல் மழையகாவே பெய்ததால் அணைகளுக்கு நீா்வரத்து குறைய துவங்கியது. இதில் முழு கொள்ளளவில் கடந்த நான்கு மாதங்களாக இருந்த சோலையாறு அணையின் நீா்மட்டமும் குறைய துவங்கியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி அணைக்கு 172.92 கனஅடி நீா்வரத்தாக இருந்து அணையில் இருந்து 404.05 கனஅடிநீா் வெளியேற்றப்பட்டு தற்போது அணையின் நீா்மட்டம் 154.72 அடியாக உள்ளது.