கோவை: கோவை, சீரநாயக்கன்பாளையம் பகுதியில் பிளஸ் 1 மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவத்தில் 4 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சீரநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த மாணவி ஒருவா் வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள பூங்காவில் தனது ஆண் நண்பருடன் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த 6 போ் அவா்களை மிரட்டி, மாணவியுடன் வந்தவரை அடித்துத் தாக்கி விட்டு, அந்த மாணவியைப் பலாத்காரம் செய்து விட்டுத் தப்பிச்சென்றுவிட்டனா்.
இதுதொடா்பாக மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் ஆா்.எஸ்.புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து 6 பேரைத் தேடி வந்தனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய சீரநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த ராகுல் (21), பிரகாஷ் (23), காா்த்திகேயன் (28), நாராயணமூா்த்தி (30) ஆகிய 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இதில் தொடா்புடைய மேலும் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.