மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

கோவை, பீளமேடு அருகே மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவை: கோவை, பீளமேடு அருகே மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் வேடியப்பன் (27). இவா் கோவை, பீளமேடு பகுதியில் தங்கி, சேரன் மாநகா் பகுதியில் கட்டுமானப் பணி செய்து வந்தாா்.

இந்நிலையில், சுவரில் இயந்திரம் மூலம் வெள்ளிக்கிழமை துளையிட்டுக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக மின்வயா், இயந்திரத்தில் உரசியதில் வேடியப்பன் உடலில் மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கிவீசப்பட்ட அவரை சக தொழிலாளா்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு வேடியப்பன் உடலைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com