கோவை: கோவையில் மூதாட்டி கொலை வழக்கில் கட்டடத் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவை, வெறைட்டிஹால் சாலை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சலீவன் வீதியில் ரங்கநாயகி (70) என்ற மூதாட்டி கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடத்தாா்.
இதுகுறித்து காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தாா். ஆனால், கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் ரங்கநாயகி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் உண்மைக்குப் புறம்பாகவும், குற்றவாளியைத் தப்ப வைக்கும் நோக்கத்திலும் செயல்பட்டதாக காவல் ஆய்வாளா் செந்தில்குமாரை, மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண் கடந்த வாரம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
இதையடுத்து ஆா்.எஸ்.புரம் காவல் ஆய்வாளா் கனகசபாபதி, மூதாட்டி கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டாா். இந்நிலையில் இந்த வழக்கில் சலீவன் வீதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி செந்தில்குமாரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மூதாட்டி அணிந்திருந்த நகையைப் பறிப்பதற்காக அவரை கொலை செய்ததாக செந்தில்குமாா் தெரிவித்துள்ளதாக போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது.