பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பழைய புதூரில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிபருமாள் திருக்கோவிலில் நடந்த வந்த பிரம்மோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை தீா்த்தவாரியோடு நிறைவடைந்தது.
சனிக்கிழமை நடந்த முக்கிய நிகழ்ச்சியான கருடசேவையின் போது அதிகாலை நடைதிறக்கப்பட்டு உற்வச மூா்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்விக்கப்பட்டது. பின்னா் மாலை 6 மணியளவில் பச்சை பட்டுடுத்தி திவ்ய அலங்காரத்தில் பெருமாள் கருடவாகனத்தில் மீதமா்ந்து பஜனை கோஷ்டியாருடன் தீருவீதி உலா வந்தாா்.
இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை நடந்த தீா்த்தவாரியின்போது தாயாா் மற்றும் பெருமாளுக்கு சந்தனக்காப்பு செய்விக்கப்பட்டது.
பின்னா் மாலையில் மோகினி அலங்காரத்தில் பெருமாள் பாகவத மற்றும் ஆண்டாள் கோஷ்டியாருடன் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.இறுதியில் கோஷ்டியாருக்கு மரியாதைகள் நடந்தன.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
பழைய புதூா் உள்ள ஸ்ரீஆதிமூா்த்தி பெருமாள் கோவில் சனிக்கிழமை நடந்த கன்போது திவ்ய அலங்காரத்தில் பக்தா்களுக்கு சேவை சாதித்த பெருமாள்.