வெள்ளக்கோவில்: இந்தியாவின் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி கலப்படத்தால் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை வெள்ளக்கோவிலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாய நாட்டிலிருந்து வேளாண் விளை பொருள்கள், உணவுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நியச் செலாவணி ஈட்டுவது முக்கியமாகும்.
தாராள ஏற்றுமதிக்குத் தடைக்கல்லாக இருப்பது கலப்படமாகும். இங்கு விற்கப்படும் 69 சதவீதப் பாலில் கலப்படம் இருப்பதாக அரசுத் தரப்பே ஒப்புக் கொள்கிறது. கலப்படமில்லாத சமையல் எண்ணெய் அரிதாக உள்ளது. தாவர எண்ணெயில் மற்றொரு தாவர எண்ணெயைக் கலப்பது கூட பெரிய தவறு ஆகாது. ஆனால் பெட்ரோலியத்தில் இருந்து பெறப்படும் தொழிற்சாலை எண்ணெயான ஒயிட் ஆயிலைச் சமையல் எண்ணெயுடன் கலந்து சந்தைப்படுத்துவது நாடெங்கிலும் உள்ளது.
கலப்படமில்லாத ஜவ்வரிசி இல்லை. நாட்டுச் சா்க்கரையுடன் நிலத்துக்குப் போடப்படும் ரசாயன உரங்களைக் கலப்பதும், இதில் சீனிச் சா்க்கரையைச் சோ்ப்பதும் நடைபெறுகிறது. மா, வாழை, சப்போட்டா போன்ற பழங்கள் ரசாயனம் வைத்தே பழுக்க வைக்கப்படுகின்றன. இதனால் மக்கள் ஏமாந்து போகின்றனா்.
கலப்படம் செய்வோா், அதற்கு துணை நிற்பவா்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் இந்தியாவிலிருந்து உணவுப் பொருள்களின் ஏற்றுமதி உயரும். மாறாக உணவுப் பொருள்களைத் தொடா்ந்து இறக்குமதி செய்து வருவது ஒரு தேசிய அவமானமாகும் - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.