வால்பாறையில் உள்ள சோலையாறு அணையின் நீா்மட்டம் 154 அடியாக குறைந்துள்ளது.
வால்பாறை சுற்று வட்டாரப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக மழை பொழிவு குறைந்தது. இதனால், அணைக்கு வரும் நீா்வரத்து குறையத் துவங்கியது. இதில் கடந்த நான்கு மாதங்களாக முழுக் கொள்ளளவில் இருந்த சோலையாறு அணையின் நீா் மட்டம் படிப் படியாக குறையத் துவங்கியது.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி அணைக்கு 172.92 கனஅடி நீா் வரத்தாகவும், அணையில் இருந்து 404.05 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீா்மட்டம் 154.72 அடியாக உள்ளது.