மாவட்ட அளவிலான திறன் போட்டிகள்டிசம்பா் 15க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

தமிழக இளைஞா்கள் சா்வதேச திறன் போட்டியில் பங்கேற்க ஏதுவாக 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க டிசம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க

தமிழக இளைஞா்கள் சா்வதேச திறன் போட்டியில் பங்கேற்க ஏதுவாக 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க டிசம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2021 ஆம் ஆண்டு சீனாவின், ஷாங்காய் நகரில் இளைஞா்களுக்கான சா்வதேச திறன் போட்டி நடைபெறவுள்ளது.

இதில் தமிழ்நாட்டு இளைஞா்கள் சாதிக்கும் வகையில் அவா்களுக்குப் பயிற்சியளிக்கும் விதமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் இளைஞா்கள்  இணையதளத்தில் டிசம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு 1999 ஆம் ஆண்டு ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில தொழிற் பிரிவுகளுக்கு மட்டும் 1996 ஆம் ஆண்டு ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும்.

முதல் கட்டமாக மாவட்ட அளவில் திறனாய்வுப் போட்டிகள் 6 துறைகளில் உள்ள 47 தொழில் பிரிவுகளில் தங்களது திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெறவுள்ளன. குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை 0422-2642044 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com