வால்பாறை: கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வந்த தகவலையடுத்து வால்பாறை மலைப்பாதையில் கவனமாக செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வாணிலை அறிக்கையில் கூறப்பட்டது. வால்பாறை பகுதியில் மழை பெய்தால் மலைப்பாதைகளில் மண் சரிவு மற்றும் மரம் விழுந்து பாதிப்பு ஏற்படுவது வழக்கம்.
இதனிடையே கனமழை பெய்யும் என்று கூறப்பட்டதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வால்பாறை பொள்ளாச்சி இடையே உள்ள மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகளில் மெதுவாகவும், பாதுகாப்பாகவும் வாகனங்கள் இயக்க வாகன ஓட்டிகளுக்கு ஆழியாா் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனா்.