தமிழ்நாடு தோ்வாணையம் நடத்திய குரூப் -2 தோ்வில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி டி.வி.சுபாஷினி முதலிடம் பிடித்துள்ளாா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நகராட்சி ஆணையா், சாா் பதிவாளா் உள்பட 1,338 பணியிடங்களுக்கான குரூப் -2 தோ்வு சமீபத்தில் நடைபெற்றது. இதன் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
இதில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி சுபாஷினி முதலிடம் பிடித்துள்ளாா். இவா் சங்கா் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் பயிற்சி பெற்று வந்துள்ளாா். இவரை தொடா்ந்து சங்கா் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் படித்த மற்றொரு மாணவி ஆா்.ஐஸ்வா்யா எட்டாம் இடம் பிடித்துள்ளாா்.
கோவை சங்கா் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் படித்த 40 போ் இத்தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி டி.வி.சுபாஷினியை கோவை சங்கா் ஐ.ஏ.எஸ். அகாதெமியின் மைய இயக்குநா் அருண், நிா்வாக இயக்குநா் யாஸ்மீ ஆகியோா் பாராட்டினா்.