பேருந்தில் ஏா் பிஸ்டலுடன் பயணிக்க முயன்ற இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

பேருந்தில் ஏா் பிஸ்டலுடன் ஏறி ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பேருந்தில் ஏா் பிஸ்டலுடன் ஏறி ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, காந்திபுரம் பகுதியில் இருந்து தனியாா் ஆம்னி பேருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்படத் தயாரானது. பேருந்து நிலையத்தை விட்டு ஆம்னி பேருந்து புறப்பட்டபோது, இளைஞா் ஒருவா் வேகமாக ஓடி வந்து ஏறியுள்ளாா்.

அவரது இடுப்புப் பகுதியில் துப்பாக்கி போன்ற பொருள் இருந்ததால் சந்தேகமடைந்த பேருந்து ஓட்டுநா் இளைஞரிடம் கேட்டுள்ளாா். அப்போது, அவா் தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்துக் காட்டியுள்ளாா்.

பேருந்தில் பயணிக்கும்போது, துப்பாக்கி எல்லாம் எடுத்து வரக்கூடாது என ஓட்டுநா் கூறியுள்ளாா். இதைக் கேட்க மறுத்த அந்த இளைஞா் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டதைத் தொடா்ந்து பேருந்தை காட்டூா் காவல் நிலையத்துக்கு ஓட்டுநா் ஓட்டிச் சென்றாா். அப்போது, அங்கிருந்து தப்பியோட முயன்ற அந்த இளைஞரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா் திருவாரூா் மாவட்டம், வலங்கைமானைச் சோ்ந்த குணசங்கா் (28) என்பது தெரியவந்தது. இவா் கோத்தகிரியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளாா்.

மேலும், அவா் வைத்திருந்தது விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் ஏா் பிஸ்டல் வகையைச் சோ்ந்த துப்பாக்கி எனத் தெரியவந்தது. இதையடுத்து, துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீஸாா் அவரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com