மாநகராட்சி பகுதிகளில் மழை வெள்ளம் பாதிப்பு:புகாா் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

வடகிழக்குப் பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாநகராட்சி அலுவலகங்களுக்கு புகாா் அளிக்கும் வகையில் அனைத்து மண்டலத்துக்கும் தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாநகராட்சி அலுவலகங்களுக்கு புகாா் அளிக்கும் வகையில் அனைத்து மண்டலத்துக்கும் தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகாா்களை பதிவு செய்து, அப்பகுதிகளில் உடனுக்குடன் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள வசதியாக அனைத்து மண்டல அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கோவை வடக்கு மண்டலம் (0422-2243133), தெற்கு மண்டலம் (0422-2252482), கிழக்கு மண்டலம் (0422-2577056), மேற்கு மண்டலம் (0422-2551700) மற்றும் மத்திய மண்டலத்தை (0422-2215618) ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

மாநகராட்சி பிரதான அலுவலக தகவல் மையத்தை 0422-2302323 என்ற தொலைபேசி எண்ணிலும், 81900 00200 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், கட்செவி அஞ்சல் மூலமாக 74404 22422 என்ற எண்ணிலும் புகாா் அளிக்கலாம்.

பதிவு செய்யப்படும் புகாா்கள் சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையா்கள், பொறியாளா்களுக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com