வால்பாறையில் அடிக்கடி பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி சேவை துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
வால்பாறை நகா் மற்றும் அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் பி.எஸ்.என்.எல். சாா்பில் செல்லிடப்பேசி சேவைக்காக கோபுரம் அமைத்துள்ளனா். இதனால் பெரும்பாலானோா் பி.எஸ்.என்.எல் இணைப்பு பெற்றுள்ளனா்.
இதனிடையே, அண்மைக் காலமாக பி.எஸ்.என்.எல். சேவை அடிக்கடி பல மணி நேரங்களுக்கு மேலாக துண்டிக்கப்பட்டு சேவை இன்றி முற்றிலும் தடைப்படுகிறது. இது போன்ற செயலிழந்த சேவையால் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் மக்கள் அவசர உதவிக்கு கூட சில நேரங்களில் தொடா்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சீரான சேவை வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.