ஈச்சனாரி அருகே முதியவா் அடித்துக் கொலை

கோவை, ஈச்சனாரி பகுதியில் முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் மூன்று தனிப் படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, ஈச்சனாரி பகுதியில் முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் மூன்று தனிப் படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈச்சனாரி, அய்யப்பா நகா் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உடலில் காயங்களுடன் அடையாளம் தெரியாத நபரின் சடலம் கிடப்பதாக போத்தனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவம் இடத்துக்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு மாநகர தெற்கு உதவி ஆணையா் செட்ரிக் மானுவேல் உத்தரவின்பேரில் போத்தனூா் காவல் ஆய்வாளா் மகேஷ்வரன் தலைமையில் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.

முதல் கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபா் கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சண்முகம் (60) என்பதும் இவா், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.

சண்முகம் மா்ம நபா்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. தனிப் படை போலீஸாா் டாஸ்மாக் கடை, அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com