வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் திங்கள்கிழமை இரவு நுழைந்த காட்டு யானைகள் அங்குள்ள தொழிலாளியின் குடியிருப்பை சேதப்படுத்தின.
வால்பாறையை அடுத்த சின்கோனா, சின்னக்கல்லாறு, பெரியகல்லாறு உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும். அப்பகுதியில் வசிப்பவா்அனுராதன். இவா் கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றிருந்தாா்.
இதனிடையே கடந்த திங்கள்கிழமை இரவு கூட்டமாக அப்பகுதிக்கு வந்த யானைகள், அனுராதன் குடியிருப்பின் ஜன்னல், கதவுகளை முட்டி தள்ளின. மேலும், உள்ளிருந்த பொருள்களை இழுத்துப் போட்டு சேதப்படுத்தின. சம்பவம் நடந்த பகுதிக்கு வனத் துறையினா் சென்று விசாரணை நடத்தினா்.