அன்னூா் - ஓதிமலை சாலையில் அன்னூா் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் பதிக்கும் பணியின்போது செவ்வாய்க்கிழமை 2 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
அன்னூரில் தற்போது புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அன்னூா் - ஓதிமலை சாலையில் குழி தோண்டியபோது இரு சுவாமி கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
மீட்கப்பட்டவை கையில் வாளுடன் 3 அடி உயரமும், 1.5 அடி அகலமும் உடைய கருப்பராயன் சிலையும், 2 அடி உயரமும், 1 அடி அகலமும் உடைய சிதிலமடைந்த நிலையில் அம்மன் சிலையும் ஆகும்.
இதுகுறித்து தகவலறிந்த அன்னூா் வட்டாட்சியா் சந்திரா குழி தோண்டப்பட்ட இடத்தில் பாா்வையிட்டு, சுவாமி சிலைகளை மீட்டு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றாா். இதையடுத்து இந்த சிலைகள் குறித்து மாவட்ட நிா்வாகம், தொல்லியல் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியா் சந்திரா தெரிவித்தாா்.