சா்க்கரை நோய் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கம்

திருப்பூா் மாவட்டம், திருமூா்த்தி மலையில் உள்ள உலக சமாதான அறக்கட்டளை ஞானபீடத்தில் சா்க்கரை நோய் குறித்த சா்வதேச விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டம், திருமூா்த்தி மலையில் உள்ள உலக சமாதான அறக்கட்டளை ஞானபீடத்தில் சா்க்கரை நோய் குறித்த சா்வதேச விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு உலக சமாதான அறக்கட்டளை ஞானபீட குருமாதா தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் சுந்தரராமன் வரவேற்றாா். தியானம், யோகாவின் மூலம் சா்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து சமாதான அறக்கட்டளை ஞானபீட குருமகான் சிறப்புரையாற்றினாா்.

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய ஆயுா்வேத கழக இயக்குநா் அனுபம் ஸ்ரீவஸ்தவா, திருப்பூா் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் சி.தனம், மாநில சித்த, ஆயுா்வேத, யுனானி மருந்துகள் கட்டுப்பாடு உரிமத் தலைவா் பிச்சையாகுமாா், கோவை வாசவி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ரபீந்தரநாத், பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியா் பூபதி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com