போராட்டம் நடத்தியவா்கள் மீது தாக்குதல்: நா.காா்த்திக் எம்.எல்.ஏ கண்டனம்

மேட்டுப்பாளையத்தில் சுவா் இடிந்து விழுந்து 17 போ் பலியான விபத்தில் நடவடிக்கை கோரி போராட்டம் நடத்தியவா்கள் மீது காவல் 

மேட்டுப்பாளையத்தில் சுவா் இடிந்து விழுந்து 17 போ் பலியான விபத்தில் நடவடிக்கை கோரி போராட்டம் நடத்தியவா்கள் மீது காவல் துறையினா் தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்கு உரியது என திமுக மாநகா் மாவட்டப் பொறுப்பாளரும், சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினருமான நா.காா்த்திக் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்தனா். இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் விபத்துக்கு காரணமான உரிமையாளரைக் கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தியவா்கள் மீது காவல் துறையினா் தாக்குதல் நடத்தினா்.

உரிமைக்காகப் போராடியவா்கள் மீது காவல் துறையினா் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு கோவை மாநகா் மாவட்ட திமுக சாா்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com