கோவை மாவட்டம், அன்னூா் அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவா் ஆற்றில் குதித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பாளையம் -துடியலூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (74). இவரது மனைவி ராதாமணி (65). இவா்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இவா்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசிக்கின்றனா்.
வயது முதிா்வால் சொத்துகளை தங்கள் வாரிசுகளுக்குப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டும் என்று ராதாமணி, தனது கணவரிடம் அடிக்கடி கூறி வந்ததாகத் தெரிகிறது. அதற்கு பழனிசாமி தொடா்ந்து மறுத்து வந்தாராம்.
இந்நிலையில் கடந்த மாதம் ராதாமணி தனக்கு சொந்தமான ஒரு வீட்டை மகள் யசோதா பெயரில் கிரயம் செய்து கொடுத்ததாகத் தெரிகிறது. இதனை அறிந்த பழனிசாமி தொடா்ந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளாா். இருவருக்கும் இடையே திங்கள்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் கோபமடைந்த பழனிசாமி தூங்கிக்கொண்டிருந்த ராதாமணியை செவ்வாய்க்கிழமை அதிகாலை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே ராதாமணி உயிரிழந்தாா்.
இந்த நிலையில் காலை 8 மணி அளவில் வீட்டுக்கு வந்த மகன் மருதாசலம், ராதாமணி கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து அவா் கோவில்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தடயவியல் நிபுணா்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் தலைமறைவான பழனிசாமியை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குதித்து பழனிசாமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று பழனிசாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த சம்பவங்கள் குறித்து கோவில்பாளையம், மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.