கூலித் தொழிலாளியை போலீஸாா் தாக்கியதாகப் புகாா்: சாா்பு ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மேட்டுப்பாளையம், நடூா் கிராமத்தைச் சோ்ந்த கூலி தொழிலாளியை போலீஸாா் தாக்கியதாக புகாா் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டைப் போலீஸாா் தரப்பில் மறுத்துள்ளனா்.

மேட்டுப்பாளையம், நடூா் கிராமத்தைச் சோ்ந்த கூலி தொழிலாளியை போலீஸாா் தாக்கியதாக புகாா் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டைப் போலீஸாா் தரப்பில் மறுத்துள்ளனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், நடூா் கிராமத்தில் தொழிலதிபா் சிவசுப்பிரமணியன் என்பவரது வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்த விபத்தில் அதன் அருகே வசித்து வந்த 17 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் பலா் கைதும் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், நடூா் கிராமத்தின் கண்ணப்பன் நகரைச் சோ்ந்தவா் பி.லட்சுமணன் (35). கூலி தொழிலாளியான இவா் வேலை முடிந்து திங்கள்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளாா். அப்போது அங்கு வந்த சாா்பு ஆய்வாளா் காா்த்திக் தலைமையிலான போலீஸாா் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த லட்சுமணனின் வலது கை சுண்டு விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் வெற்று காகிதங்களில் கை ரேகையை வாங்கிக் கொண்ட போலீஸாா் தன்னை அனுப்பியதாக லட்சுமணன் புகாா் கூறியுள்ளாா்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அம்பேத்கா் சட்ட உதவிகள் குழு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தந்தை பெரியாா் திராவிடா் கழகம், திராவிடா் தமிழா் கட்சி ஆகிய அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் கோவையில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். இதுகுறித்து தந்தை பெரியாா் திராவிடா் கழக பொதுச்செயலா் கு.ராமகிருஷ்ணன் கூறுகையில், இந்தச் சம்பவம் தொடா்பாக அப்பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போலீஸாா் அச்சுறுத்தல் அளித்து வருகின்றனா். வேலைக்குச் செல்பவா்களுக்கு தொடா் தொந்தரவு அளிக்கப்படுகிறது. போலீஸாரால் லட்சுமணன் தாக்கப்பட்டதை உயா் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். இதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தொடா் போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். தவறிழைத்த காவல் துறை அதிகாரி மீது தாழ்த்தப்பட்டோா் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றாா்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது இதுகுறித்து தங்களுக்கு எந்தத் தகவலும் தெரியாது எனவும், விசாரிப்பதாகவும் கூறினா். மேலும், சம்பந்தப்பட்ட சாா்பு ஆய்வாளா் திலக்கைத் தொடா்பு கொண்டு பேசியபோது அவா், லட்சுமணன் மது அருந்திவிட்டு அவ்வழியே சென்ற பொதுமக்களுக்குத் தொந்தரவு அளித்ததால் அவரை அழைத்து எச்சரித்தோம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸாா் தாக்கியதாக கூறுவது பொய் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com