மேட்டுப்பாளையம்-உதகை இடையே 8 நாள்களுக்குப் பிறகு மலை ரயில் இயக்கம்

மேட்டுப்பாளையம்-உதகை இடையே 8 நாள்களுக்குப் பிறகு மலை ரயில் இயக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்-உதகை இடையே 8 நாள்களுக்குப் பிறகு மலை ரயில் இயக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டன. இதனால் கடந்த 2 ஆம் தேதி முதல் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, மலை ரயில் பாதையில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து மேட்டுப்பாளையம்-குன்னூா் இடையே 8 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மலை ரயில் இயக்க சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் முடிவு செய்தது.

இதையடுத்து, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 7.10 மணிக்கு குன்னூருக்கு மலை ரயில் இயக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com