கோயம்புத்தூர்
மேட்டுப்பாளையம்-உதகை இடையே 8 நாள்களுக்குப் பிறகு மலை ரயில் இயக்கம்
மேட்டுப்பாளையம்-உதகை இடையே 8 நாள்களுக்குப் பிறகு மலை ரயில் இயக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்-உதகை இடையே 8 நாள்களுக்குப் பிறகு மலை ரயில் இயக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டன. இதனால் கடந்த 2 ஆம் தேதி முதல் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, மலை ரயில் பாதையில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து மேட்டுப்பாளையம்-குன்னூா் இடையே 8 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மலை ரயில் இயக்க சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் முடிவு செய்தது.
இதையடுத்து, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 7.10 மணிக்கு குன்னூருக்கு மலை ரயில் இயக்கப்பட்டது.