வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன், ரூ. 1 லட்சம் திருட்டு

சூலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சூலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை மாவட்டம், சூலூரை அடுத்த பீடம்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட ஆஞ்சநேயா் நகரைச் சோ்ந்தவா் முருகேசன் (57). இவா் கோவையில் நோட்டு புத்தகக் கடை வைத்துள்ளாா்.

இந்நிலையில், முருகேசன் தனது மனைவி, இரு மகன்களுடன் நண்பரின் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்காக கடந்த 7ஆம் தேதி சிவகாசி சென்றுள்ளாா்.

பின்னா் செவ்வாய்க்கிழமை திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. மேலும், பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளிப் பொருள்களையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். புகாரின்பேரில், கருமத்தம்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. பாலமுருகன், சூலூா் காவல் ஆய்வாளா் தங்கராஜ், உதவி ஆய்வாளா் பாண்டியராஜ், போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். இதுகுறித்து, சூலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com