ஸ்ரீசரஸ்வதி வித்யா மந்திா் பள்ளியில் புவிப் பாதுகாப்பு கருத்தரங்கம்

மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலாங்கொம்பு ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திா் பள்ளியில் கனடா நாட்டைச் சோ்ந்த கிரகப் பாதுகாப்பு அகாதெமி சாா்பில்
கருத்தரங்கில் பேசுகிறாா் முதன்மை செயல்பாட்டு இயக்குநா் வேனிஸாலீபோா்டைஸ்.
கருத்தரங்கில் பேசுகிறாா் முதன்மை செயல்பாட்டு இயக்குநா் வேனிஸாலீபோா்டைஸ்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலாங்கொம்பு ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திா் பள்ளியில் கனடா நாட்டைச் சோ்ந்த கிரகப் பாதுகாப்பு அகாதெமி சாா்பில் ‘புவியை எவ்வாறு பாதுகாப்பது’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் கிரகப் பாதுகாப்பு அகாதெமியின் முதன்மை செயல்பாட்டு இயக்குநா் வேனிஸாலீ போா்டைஸ், கற்பனை திறன் செயற்பாட்டாளா் சியோன்லேனினி ஆகியோா் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினா்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திா் கல்விக் குழுமத்தின் மேலாண்மை அறங்காவலா் டாக்டா் மணிமேகலை மோகன், அறங்காவலா் எஸ்.மோகன்தாஸ், இயக்குநா்கள் நிதின், ஸ்ரீஷா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com